
மணிரத்னம் தயாரிக்கும் படத்திலிருந்து கே.வி.ஆனந்த் விலகல்
இதில் வரும் 9 கதைகளை மணிரத்னம், கெளதம் மேனன், கே.வி.ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன் ராம், ரதீந்திரன், அரவிந்த் சாமி, சித்தார்த் மற்றும் கார்த்திக் நரேன் ஆகியோர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதில் ரதீந்திரன் படத்தில் சித்தார்த், பார்வதி ஆகியோர் நடிக்க படப்பிடிப்பை முடித்துவிட்டார். அதே போல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, பிரசன்னா, சாய் சித்தார்த், பூர்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.
மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் மும்முரமாக இருப்பதால் இந்த படத்தின் பணிகளில் தொய்வு ஏற்படவே பொன்ராம் விலகிவிட்டார். இந்த நிலையில் தற்போது கே.வி.ஆனந்தும் விலகி விட்டார் அவருக்கு பதிலாக சாய்வசந்த் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இயக்கத்தில் அருவி படத்தில் அதிதி பாலன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் காரைக்குடி பகுதியில் நடக்க இருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!