
டெடியின் கதை
ஸ்ரீ வித்யா ஒரு இளம் மாணவி, கல்லூரி சுற்றுலா பயணத்தின் போது ஒரு விபத்தில் சிக்கி ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். இந்த மருத்துவமனை ஸ்ரீவித்யா உதவியற்று, தனியாக இருப்பதால் அவரை, மருத்துவ பலன்களுக்கு பயன்படுத்திக் கொள்ள, செயற்கையாக கோமாவில் வைக்கின்றனர்.
பேச்சுதிறன் கொண்ட கரடி பொம்மையான டெடி, ஸ்ரீ வித்யாவின் அவல நிலையை அறிந்ததும், அவரது உயிரைக் காப்பாற்ற தீர்மானிக்கிறது. ஆனால் இதனை அதனால் தனியாக செய்ய முடியாது. சிவா என்ற பலசாலி இளைஞன், ஒரு பெண்ணைக் காப்பாற்றுவதை டெடி காண்கிறது. மேலும் ஸ்ரீவித்யா விசயத்தில் அவனது உதவியை நாட முடிவு செய்கிறது. டெடி, சிவாவிடம் ஸ்ரீவித்யாவின் முழு கதையையும் சொல்கிறது, இருவரும் ஸ்ரீ வித்யாவைக் காப்பாற்றும் ஒரே நோக்கத்துடன் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்குச் செல்கின்றனர். பின்னர் நடக்கும் சாகசங்களே படம்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!