
பொன்னியின் செல்வனில் பணியாற்றும் இளம் காஸ்ட்டியூம் டிசைனர்கள்
இது சரித்திர படம் என்பதால் சரித்திரகால ஆடைகளை தேர்வு செய்வதும், தயார் செய்வதும் முக்கியமானதாக இருக்கிறது. இதற்காக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஏக் லக்கானி தலைமையில் சுமார் 20 இளம் ஆடை வடிவமைப்பாளர்கள் பணியாற்றுகிறார்கள்.
கொரோனா பிரச்சினைக்கு பிறகு ஐதராபாத் பிலிம்சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து 45 நாட்கள் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நடந்தது. இது இரண்டாவது கட்ட படிப்பிடிப்பு. 3வது கட்ட படப்பிடிப்புகள் ராஜஸ்தானில் நடக்க இருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இளம் ஆடை வடிவமைப்பாளர்கள் இயக்குனர் மணிரத்னத்துடக் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.
அதனை ஏக் லக்கானி தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டு எழுதியிருப்பதாவது: பணியாற்றும் அணிகளில் ஒரு அணி, இதோ பெரிய தலைவர் மணி அவர்களுடனேயே புகைப்படம். இந்த அசுரத்தனமான படப்பிடிப்பை முழு மனதுடன் முடிக்கிறோம். இந்த கொரோனா காலத்தில் இதை முடித்திருக்கிறோம் என்பதை நம்ப முடியவில்லை. இனி நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். என்று எழுதியிருக்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!