
பேச்சுலர் பார்ட்டி கொடுத்த க.க.கொ நடிகை நிரஞ்சனி
இரண்டாவது மகள் விஜயலட்சுமி, "சென்னை 28" படத்தில் நடிகையாக அறிமுகமானவர். "அஞ்சாதே, சரோஜா, பிரியாணி, சென்னை 28 பார்ட் 2" ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் "பண்டிகை" படத்தின் இயக்குனர் பெரோஸ்-ஐ காதலித்து மணந்து கொண்டார்.
மூன்றாவது மகள் நிரஞ்சனி. ஆடை வடிவமைப்பாளரான இவர் கடந்த வருடம் வெளிவந்த "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" படத்தின் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார். அப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை விரைவில் காதல் மணம் புரிய உள்ளார். தனது பேச்சிலர் வாழ்க்கை முடிவதையொட்டி சமீபத்தில் நிரஞ்சனி தனது தோழிகளுடன் "பேச்சுலர் பார்ட்டி"யைக் கொண்டாடியிருக்கிறார். அந்தப் புகைப்படங்களை விஜயலட்சுமி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
"காதல் கோட்டை" படத்தை இயக்கிய அகத்தியன், தனது மூன்று மகள்களுக்கும் காதல் திருமணம் செய்து வைக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!