
ஒரு படத்திற்குக் கிடைத்த விடிவுகாலம், மற்ற படங்களுக்கும் கிடைக்குமா ?
செல்வராகவன் இயக்கத்தில், யுவன் இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா நடித்த "நெஞ்சம் மறப்பதில்லை" படம் முடிந்து சில வருடங்கள் ஆகியும் வெளிவராமலே இருந்தது. அந்தப் படம் தற்போது மார்ச் 5 வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.
அந்தப் படத்திற்குக் கிடைத்த விடிவு காலம் முடிந்து சில வருடங்களாக வெளிவராமல் உள்ள மற்ற படங்களுக்கும் கிடைக்குமா என அப்படங்களின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
காஜல் அகர்வால் நடித்துள்ள "பாரிஸ் பாரிஸ்", விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்துள்ள "இடம் பெருள் ஏவல்", கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ள "நரகாசூரன்", எஸ்ஜே சூர்யா நடித்துள்ள "இறவாக்காலம்", வெங்கட் பிரபு இயக்கியுள்ள "பார்ட்டி", விக்ரம் நடித்துள்ள "துருவ நட்சத்திரம்", ஆகிய படங்கள் இந்த வருடமாவது வெளிவந்துவிடுமா என சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்க வேண்டும்.
சந்தானம் நடித்துள்ள "சர்வர் சுந்தரம்" அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி வெளிவராமல் தவித்துக் கொண்டிருக்கும் படங்களுக்கு வரப்பிரசாதமாக ஓடிடி வந்துள்ளன. ஆனால், அவற்றில் கூட அப்படங்களை வெளியிட முடியாத அளவிற்கு பிரச்சினைகள் உள்ளது போலிருக்கிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!