
எம்பி சீட் தருபவர்கள் பக்கம் போவேன் - சந்தானம்
பிப் 09, 2021
Advertisement
ஏ 1 படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் - இயக்குனர் ஜான்சன் கூட்டணியில் உருவாகி உள்ள படம் பாரீஸ் ஜெயராஜ். நாயகிகளாக அனைகா சோதி, சஷ்டிகா நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பிப்.,12ல் படம் திரைக்கு வரும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சந்தானம், ""இது ரொம்ப தனித்துவமான கதை. காமெடி அருமையாக வந்திருக்கிறது. எனக்காக அவருடைய அணியுடன் உட்கார்ந்து காமெடிக்காக உழைத்துள்ளார் இயக்குநர் ஜான்சன். நிறைய விஷயங்கள் எழுதி எழுதி இந்தப் படத்தின் வசனங்களை இறுதிச் செய்தார். இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சார் தான். ஏ 1 படம் ஹிட்டு அவரும் ஒரு முக்கியமான காரணம். இந்தப் படத்தில் அனைத்துமே கானா பாடல்கள் தான். ரொம்பவே ரசித்து இசையமைத்தார்.
சில ஆக்ஷன் படங்களில் நடித்தால், ஏன் ஆக்ஷன் படம் காமெடி படம் பண்ணுங்கள் என்கிறீர்கள். காமெடி படம் செய்தால் ஏன் ஆக்ஷன் படம் பண்ணுவதில்லை என்கிறார்கள். இப்படி பல பேர் குழப்புவதால் தான் சில சமயங்களில் அடுத்து ஆக்ஷன் படம் பண்ணலாமா என்று யோசிப்பதுண்டு. மக்கள் கவலையை மறந்து சிரிப்பதற்கான முயற்சியை செய்துக் கொண்டிருக்கிறேன். அதை சரியாக செய்வோம்" என்றார்.
அரசியல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, எனக்கு இந்தக்கட்சி, அந்தக்கட்சி என்று எதுவுமில்லை. யார் எம்பி சீட் தருகிறார்களோ அவர்கள் பக்கம் போவேன் என கிண்டலாக பதிலளித்தார். படம் முழுக்க கானா பாடகராக நடித்துள்ளார் சந்தானம்.
சில ஆக்ஷன் படங்களில் நடித்தால், ஏன் ஆக்ஷன் படம் காமெடி படம் பண்ணுங்கள் என்கிறீர்கள். காமெடி படம் செய்தால் ஏன் ஆக்ஷன் படம் பண்ணுவதில்லை என்கிறார்கள். இப்படி பல பேர் குழப்புவதால் தான் சில சமயங்களில் அடுத்து ஆக்ஷன் படம் பண்ணலாமா என்று யோசிப்பதுண்டு. மக்கள் கவலையை மறந்து சிரிப்பதற்கான முயற்சியை செய்துக் கொண்டிருக்கிறேன். அதை சரியாக செய்வோம்" என்றார்.
அரசியல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, எனக்கு இந்தக்கட்சி, அந்தக்கட்சி என்று எதுவுமில்லை. யார் எம்பி சீட் தருகிறார்களோ அவர்கள் பக்கம் போவேன் என கிண்டலாக பதிலளித்தார். படம் முழுக்க கானா பாடகராக நடித்துள்ளார் சந்தானம்.















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!