
தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே 100 சதவீத அனுமதி
தென்னிந்தியாவில் மற்ற மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றில் தமிழ்நாட்டிற்குப் பிறகுதான் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனாலும், இதுவரையிலும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கியுள்ளனர்.
கேரளாவில் பிப்ரவரி மாதம் முழுவதும் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என அரசு அறிவித்துவிட்டது. தமிழ்நாட்டில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மற்ற மாநிலங்களில் உள்ள திரையுலகினரும் 100 சதவீத அனுமதி வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.
"கேஜிஎப் 2, சலார்" பட இயக்குனராக பிரஷாந்த் நீல் கர்நாடக அரசுக்கு, “சினிமா அநேகம் பேருக்கு என்டர்டெயின்மெட், ஆனால், பலருக்கு அது வாழ்க்கை” என 100 சதவீத இருக்கைக்கு அனுமதி தாருங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். அது போலவே மற்ற திரையுலகிலும் கோரிக்கை எழுந்து வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!