
மீண்டும் ஒரு நாவல் படமாகிறது
ஜன 29, 2021
Advertisement
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படமாக்கி வருகிறார். கோட்டா நீலிமா எழுதிய ஷூஸ் ஆப் தி டெட் நாவலை படமாக்க இருக்கிறார் வெற்றி மாறன். சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் வாடிவாசல் படமும், சூரி நடிக்கும் படமும் நாவலை அடிப்படையாக கொண்டதே. கட்டில் என்ற நாவலும் படமாகி உள்ளது.
இந்த நிலையில் மற்றுமொரு நாவல் படமாகிறது. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக அமைதிப்படை 2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களைத் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தைத் தயாரித்து வருகிறார்.
கிராமத்துப் பின்னணியில், வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியலை மையமாக வைத்து, உணர்வுப்பூர்வமான கதைகளை எழுதி வருபவர் பிரபல எழுத்தாளர் மா.காமுத்துரை. இவர் எழுதிய "முற்றாத இரவொன்றில்" என்கிற நாவலை தழுவி படம் ஒன்றை இயக்கி தயாரிக்க இருக்கிறார் சுரேஷ் காமாட்சி. இந்த நாவலைப் படமாக்கும் உரிமையை மா.காமுத்துரையிடம் இருந்து முறைப்படி பெற்றுள்ளார் சுரேஷ் காமாட்சி.
இந்த நிலையில் மற்றுமொரு நாவல் படமாகிறது. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக அமைதிப்படை 2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களைத் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தைத் தயாரித்து வருகிறார்.
கிராமத்துப் பின்னணியில், வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியலை மையமாக வைத்து, உணர்வுப்பூர்வமான கதைகளை எழுதி வருபவர் பிரபல எழுத்தாளர் மா.காமுத்துரை. இவர் எழுதிய "முற்றாத இரவொன்றில்" என்கிற நாவலை தழுவி படம் ஒன்றை இயக்கி தயாரிக்க இருக்கிறார் சுரேஷ் காமாட்சி. இந்த நாவலைப் படமாக்கும் உரிமையை மா.காமுத்துரையிடம் இருந்து முறைப்படி பெற்றுள்ளார் சுரேஷ் காமாட்சி.
Tags
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!