
சித்ராவின் ஹேண்ட் பேக்கில் போதைப் பொருளா?: திசை மாறும் விசாரணை?
இந்நிலையில் கடந்த மாதம் 9ம் தேதி தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சித்து. அவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற சந்தேகம் தொடர்ந்து அவரது ரசிகர்கள் மத்தியில் நீடித்து வருகிறது. அதோடு அவரைப் பற்றியும், கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் ஹேமந்த் பற்றியும் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சித்துவின் மரணம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் சூழ்நிலையில், தற்கொலை செய்து கொண்டபோது சித்துவின் ஹேண்ட் பேக்கில் இருந்து போலீசார் கஞ்சா மற்றும் கஞ்சா அடைக்கப்பட்ட சிகரெட்டை மீட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சித்துவுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு என ஏற்கனவே அவரது மாமனார், அதாவது ஹேமந்த்தின் அப்பா குற்றம் சாட்டி இருந்த நிலையில், போதைப் பொருள் விவகாரமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையைத் தொடர்ந்து போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதே போல் சித்துவின் வழக்கு விசாரணையும் வேறு கோணத்திற்கு மாறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!