
இரண்டே நாட்களில் லாபக் கணக்கை ஆரம்பித்த மா இன்ட்டி பங்காரம்
இப்படம் இரண்டு நாட்களில் உலக அளவில் 28 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. முதல் இரண்டு நாட்களை விட மூன்றாவது நாளான நேற்று வசூல் அதிகமாக இருந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. நேற்றைய மூன்றாவது நாள் வசூலுடன் சேர்த்தால் 45 கோடி வசூலைப் பெற்றிருக்க வாய்ப்புள்ளது.
இப்படத்திற்கு உலகம் முழுவதும் சுமார் 11 கோடிக்கு வியாபாரம் நடந்தது. அந்த வசூலை இரண்டே நாட்களில் பெற்று லாபக் கணக்கை ஆரம்பித்துவிட்டதாம். நேற்று முதல் வசூலாகும் ஒவ்வொரு தொகையும் லாபக் கணக்கில் மட்டுமே சேரும். படத்திற்கான வரவேற்பு குறித்து படக்குழு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாம்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!