
பிளாஷ்பேக் : பழம்பெரும் நடிகை அம்பிகாவைத் தெரியுமா?
1952ல் "விசப்பின்ட விளி" படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும், நடிகர் பிரேம் நசீரின் முதல் கதாநாயகியும் இவரே ஆவார். மலையாளத்தில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். "பொன்னி" என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ரம்பையின் காதல், ராஜாராணி, மாதர்குல மாணிக்கம், யானை வளர்த்த வானம்பாடி, ரத்னபுரி இளவரசி, இவன் அவனேதான், ஸ்ரீவள்ளி, நான் வணங்கும் தெய்வம், கந்தன் கருணை, தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். நடிப்பிற்கு பிறகு அமெரிக்காவில் செட்டிலான அம்பிகா அங்கு நடனப் பள்ளியை நடத்தினார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!