
சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள்
இப்படிப்பட்ட நிலையில் படத்தை புகழ்ந்து தானே ஆக வேண்டும் என்று சிரிக்கிறார்கள். அதனால், இனி சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழும் சினிமாகாரர்கள் பேச்சை நம்பக்கூடாது. படத்தின் பர்ஸ்ட் ஷோ பார்த்துவிட்டு பேட்டி கொடுப்பவர்களையும் நம்ப கூடாது. அப்படி பேசுபவர்கள் பலர் பணத்துக்காக பேசுகிறார்கள். படக்குழுவினரே அவர்களை தியேட்டர்களுக்குள் அனுப்பி குறிப்பிட்ட யு டியூப்பில் பேச வைக்கிறார்கள். அவர்களும் படத்தை புகழ்கிறார்கள். இது ஒரு விளம்பரம் போல பேக்கேஜ் ஆக பணம் கொடுத்து செய்யப்படுகிறது. ஆகவே, நாம் படம் பார்த்துவிட்டு அல்லது நண்பர்கள் படம் பார்த்துவிட்டு சொல்லும் தகவல்கள், பொதுவாக இணையத்தில் பரவும் தகவல்களை நம்பியே படம் பார்ப்பதை முடிவு செய்ய வேண்டும் என ரசிகர்கள் தெளிவு மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!