
தமிழில் நடிக்க கதை பிடிக்கலையா இல்லை மறுக்கிறாரா ஜோதிகா
ஏப் 25, 2026
Advertisement
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஜோதிகா, திருமணத்துக்குபின் நடிப்பதை நிறுத்தினார். பின்னர் 36 வயதினிலே படத்தில், 8 ஆண்டுகளுக்குபின் ரீ என் ட்ரி ஆகி பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடித்தார். உடன்பிறப்பே படத்துக்குபின் அவர் தமிழில் நடிக்கவில்லை. மும்பையில் செட்டில் ஆனவர் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பல கதை கேட்டாலும் ஏனோ அது அவருக்கு பிடிக்கவில்லையாம். எனக்கு ஏற்ற கிடைப்பதில்லை என்கிறாராம். ஆனால் ஒரு சிலரோ அவருக்கு தமிழில் நடிப்பதில் சில பிரச்னைகள், இந்தி மாதிரி மாறுப்பட்ட கதைகளும் அவருக்கு கிடைப்பதில்லை. நீங்களே சொந்தமாக அந்த படத்தை தயாரிக்க வேண்டும் என்று பல கதை சொல்லி பிரஷர் கொடுக்கிறார்கள். அது அவருக்கு பிடிக்கவில்லை. அதனால் தமிழில் நடிக்க தயங்குகிறார் என்கிறார்கள்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!