
ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர்
ஏப் 22, 20261
Advertisement
கட்சி சேர, ஆச கூட, பவழ மல்லி போன்ற ஆல்பங்கள் மூலம் இளவட்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். அதையடுத்து, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் திரைக்கு வந்த டியூட் படத்திற்கு இசையமைத்து சினிமாவில் பிரபலமானார். இதை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள கருப்பு, அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ராக்கா மற்றும் பென்ஸ், மார்ஷல், தனுஷ் 55 என பல படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை கயாடு லோஹருடன் இணைந்து அவர் நடனமாடிய பவழ மல்லி பாடல் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இப்படியான நிலையில் தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் சாய் அபயங்கர் ஹீரோவாக நடிக்க போவதாக ஒரு செய்தி சில தினங்களாக வைரலாகி வந்தது.
இந்த செய்தியை மறுத்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் சாய் அபயங்கர். அதில், நான் ஹீரோவாக நடிக்க போவதாக வெளியாகி இருக்கும் தகவல் உண்மை இல்லை. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்திற்கு இசையமைக்க தான் ஒப்பந்தமாகி உள்ளேன். அப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மேலும், மற்றவர்கள் எல்லாம் நினைப்பது போன்று எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. நடிப்பு திறமையும் என்னிடத்தில் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் சாய் அபயங்கர்.
இந்த நிலையில் நடிகை கயாடு லோஹருடன் இணைந்து அவர் நடனமாடிய பவழ மல்லி பாடல் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இப்படியான நிலையில் தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் சாய் அபயங்கர் ஹீரோவாக நடிக்க போவதாக ஒரு செய்தி சில தினங்களாக வைரலாகி வந்தது.
இந்த செய்தியை மறுத்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் சாய் அபயங்கர். அதில், நான் ஹீரோவாக நடிக்க போவதாக வெளியாகி இருக்கும் தகவல் உண்மை இல்லை. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்திற்கு இசையமைக்க தான் ஒப்பந்தமாகி உள்ளேன். அப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மேலும், மற்றவர்கள் எல்லாம் நினைப்பது போன்று எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. நடிப்பு திறமையும் என்னிடத்தில் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் சாய் அபயங்கர்.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்கூவரதோட நிறுத்திக்கோ நைனா .. நல்லா பாட்டு பாடறே அது போதும் .. உன் நடிப்பு ஆசை பேராசை ஆகிட கூடாது. நல்லவேளை நீயே உனக்கு நடிப்பு வராது னு சொல்லிட்டே