
சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது
அதைத் தொடர்ந்து மார்ச் 9ம் தேதி சென்னையில் ஜனநாயகன் படத்தின் மறு தணிக்கை நடக்க இருந்தது. ஆனால் சென்சார் போர்டு குழுவினர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட கடைசி நேரத்தில் ரத்தானது. இந்நிலையில் ரத்தான அந்த மறு தணிக்கை நாளை சென்னையில் நடக்க உள்ளதாக தகவல்.
நாளை சென்சார் போர்டு உறுப்பினர்கள் படம் பார்க்க உள்ளனர். அவர்கள் படத்தை ஏற்று சிக்கல்கள் தீர்க்கப்பட்டு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் பட்சத்தில் விரைவில் படம் வெளியாக வாய்ப்புள்ளது. ஆனால் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தலுக்கு முன்பு ஜனநாயகன் படம் வெளியாகுமா என்பதிலும் சந்தேகம் நீடிக்கிறது. ஏப்ரல் 23க்கு பின்பு ஜனநாயகன் வெளியாகவே அதிக வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை ரீசென்சாரிலும் சிக்கல் தொடர்ந்தால் படக்குழு மீண்டும் கோர்ட்டை நாட வேண்டிய நிலைமை ஏற்படும்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!