
சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன்
குறிப்பாக, சவுந்தர்யா சினிமாவில் வந்த வேகத்திலேயே ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக் மற்றும் சிரஞ்சீவி, நாகார்ஜுனா என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி இடத்தை பிடித்தார். தனது நடிப்பாலும் வசீகரத்தாலும் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்து இழுத்து வைத்திருந்தார். அதனால் அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நான் ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் பிரியங்கா மோகன்.
கடந்த 2004ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக சவுந்தர்யா சிறிய விமானத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி தனது 31 வது வயதில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!