
மீண்டும் நடிக்க வரும் ரம்பா
சுமார் 15 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த ரம்பா, அவ்வப்போது சின்னத்திரையில் மட்டும் தலைகாட்டி வந்தார். டான்ஸ் போட்டிகளில் நடுவராக இருந்து வருகிறார். தற்போது விரைவில் வெள்ளித்திரைக்கும் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.
இதற்காக உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து ஸ்லிம் ஆகியுள்ளார். புதிய கதைகள் கேட்டு வரும் ரம்பா, ஓரிரு கதைகளை தமிழ் தெலுங்கில் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் மறுபிரவேசம் எடுக்கவுள்ளார் ரம்பா. இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!