
வாரணாசி : ஜார்ஜியாவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு
பிப் 25, 2026
Advertisement
ராஜமவுலி இயக்கத்தில், மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் தெலுங்குப் படம் "வாரணாசி". உலக அளவில் இந்தப் படத்தைக் கொண்டு சேர்க்கும் விதத்தில் அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இரண்டு முறை இந்தப் படம் பற்றி உலக அளவிலான மீடியாக்களுக்கு படக்குழுவினர் பேட்டி கொடுத்தார்கள். சரியான இடைவெளியில் இதை செய்வதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற உள்ளதாம். இதற்காக மகேஷ்பாபு புறப்பட்டுச் சென்றுள்ளார். பனி படர்ந்த மலை, ஐஸ் கட்டி மலை என ஜார்ஜியா நாட்டில் இருப்பதால் அது படத்தின் உருவாக்கத்தில் சிறப்பான ஒரு பதிவாக இருக்கும் என படக்குழுவினர் அந்த இடத்தைத் தேர்வு செய்துள்ளார்களாம்.
இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்திலும், அடுத்த கட்டப் படப்பிடிப்பு கென்யா நாட்டிலும் நடைபெற்றது. ஒரிசா மாநிலத்திலும் படப்பிடிப்பை நடத்தினார்கள். ஜார்ஜியா படப்பிடிப்பை முடித்த பிறகு மேலும் சில உலக நாடுகளில் படப்பிடிப்பு நடக்க உள்ளதாம். 2027 ஏப்ரல் 7ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற உள்ளதாம். இதற்காக மகேஷ்பாபு புறப்பட்டுச் சென்றுள்ளார். பனி படர்ந்த மலை, ஐஸ் கட்டி மலை என ஜார்ஜியா நாட்டில் இருப்பதால் அது படத்தின் உருவாக்கத்தில் சிறப்பான ஒரு பதிவாக இருக்கும் என படக்குழுவினர் அந்த இடத்தைத் தேர்வு செய்துள்ளார்களாம்.
இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்திலும், அடுத்த கட்டப் படப்பிடிப்பு கென்யா நாட்டிலும் நடைபெற்றது. ஒரிசா மாநிலத்திலும் படப்பிடிப்பை நடத்தினார்கள். ஜார்ஜியா படப்பிடிப்பை முடித்த பிறகு மேலும் சில உலக நாடுகளில் படப்பிடிப்பு நடக்க உள்ளதாம். 2027 ஏப்ரல் 7ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!