
சென்னையும், தமிழும்…. பிரபாஸ் நெகிழ்ச்சி…
கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படமான "கபுள் பிரண்ட்லி" படக்குழுவினருடன் பிரபாஸ் உரையாடிய வீடியோவில் அவர் சென்னையைப் பற்றியும், தனது தமிழைப் பற்றியும் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.
“சென்னையுடன் எனக்கு மிகவும் சிறப்பான தொடர்பு உண்டு. நான் அங்கே பிறந்தேன், மற்றும் டான் பாஸ்கோ பள்ளியில் படித்தேன். எனவே, பல வழிகளில், சென்னையில் எனது வேர்கள் இருக்கும் இடம்.
இன்று வரை, சென்னை நகரத்துடன் உணர்ச்சி ரீதியாக இணைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன். நான் பின்னர் ஆந்திராவுக்கு மாறியிருக்கலாம், ஆனால் சென்னை எப்போதும் எனது ஒரு பகுதியாக இருக்கும். நான் சில வருடங்களாக தமிழைக் கொஞ்சம் மறந்துவிட்டேன், ஆனால், ராஜு மாஸ்டர், பிரபுதேவா மாஸ்டர், சேகர் மாஸ்டர் மற்றும் அம்மா ராஜசேகர் போன்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த, எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் காரணமாக, நான் இன்னும் அடிக்கடி தமிழ் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது.
மேலும், தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள பல தொழில்நுட்பக் கலைஞர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், எனவே அவர்களுடன் பேசுவதால் மொழியுடன் இணைந்திருக்க உதவுகிறது. இல்லையெனில், நான் அதை முழுமையாக மறந்திருக்கலாம்.
சென்னைக்கு எப்போது சென்றாலும், எனது பள்ளியைப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். சில சமயங்களில் மக்கள், கலாச்சாரம், மொழி ஆகியவற்றுடன் உண்மையான சென்னையைத் தவறவிடுகிறேன். பள்ளியில் இருந்த போது, நாங்கள் அனைவரும் தினமும் தமிழில் பேசுவோம், எனவே அந்த தொடர்பு இன்னும் இருக்கிறது... இன்னும் என்னில் அந்தத் தமிழ் இருக்கிறது,” என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
அது மட்டுமல்ல ஒரு முறை மும்பையில் படப்பிடிப்பில் இருந்த போது, சாப்பாடு சரியாக இல்லை என்பதற்காக படக்குழுவினர் அனைவருக்கும் சென்னை உணவை ஆர்டர் செய்து விமானத்தில் வரவழைத்து கொடுத்ததையும் பகிர்ந்துள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!