
ராமுக்கு என்னதான் ஆச்சு? நம்பிக்கையுடன் பேசிய ஜீத்து ஜோசப்
திரிஷா இதில் கதாநாயகியாக ஒப்பந்தமானார். வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்தில் கொரோனா காரணமாக அந்த படம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆன நிலையில் மீண்டும் ராம் படத்தின் படப்பிடிப்பை ஜீத்து ஜோசப்பால் மீண்டும் துவங்க முடியவில்லை. அதற்கு தயாரிப்பாளரின் பொருளாதார நெருக்கடி காரணங்களும் பின்னணியாக சொல்லப்பட்டன.
இந்த நிலையில் சமீபத்தில் ராம் படம் குறித்து மனம் திறந்து பேசிய ஜீத்து ஜோசப் கூறும்போது, “இப்போதும் ராம் படம் குறித்து விவாதம் போய் கொண்டிருக்கிறது. கடவுள் அனுக்கிரகம் இருந்தால் அடுத்த மாதமே அந்த படத்தை துவங்க வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன். அதற்கேற்றவாறு நான் எப்போது தேதிகளை கேட்கிறேனோ அதை உடனடியாக தருவதற்கு மோகன்லால் தயாராக இருக்கிறார். அந்த அளவிற்கு ராம் படத்தை அவர் தன்னுடைய முக்கிய பட்டியலில் வைத்துள்ளார்” என்று கூறியுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!