
சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா
ஜன 01, 2026
Advertisement
நடிகை ரோஜா ஆந்திராவில் தீவிர அரசியலில் இறங்கியபின் படங்களை குறைத்தார், அமைச்சர் ஆனபின் நடிக்கவில்லை. இப்போது மீண்டும் நடிப்பில் ஆர்வம் காண்பிக்கிறார். @லெனின் பாண்டியன்# என்ற படத்தில் கங்கை அமரன் ஜோடியாக மாறுபட்ட வேடத்தில் நடித்து வருகிறார். விரைவில் அந்த படம் ரிலீஸ்.
இந்நிலையில், இன்னொரு தமிழ் படத்தில் கமிட்டாகி இருக்கிறார். தெருக்கூத்து பின்னணியில் வெளியாகி, பலரின் பாராட்டுகளை பெற்ற ஜமா படத்தை இயக்கிய பாரி இளவழகன் படம் அது. "குட் நைட்", "லவ்வர்", "டூரிஸ்ட் பேமிலி" உள்ளிட்ட ஹாட்ரிக் வெற்றிகளுக்குப் பிறகு, தனது 7வது தயாரிப்பாக மில்லியன்டாலர் நிறுவனம் தயாரிக்கிறது.
"ஜமா"வுக்குபின் பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடிக்கிறார். தனுஷ் இயக்கிய "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். "மண்டேலா", "மாவீரன்" படங்களுக்கு இசையமைத்த பரத் சங்கர் இசையமைக்கிறார். சென்னையின் பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் பேமிலி என்டர்டெயினராக படம் உருவாகிறதாம். கோடை விடுமுறைக்கு ரிலீஸ். ரோஜா என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பது சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!