
கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ்
அவர் பேசுகையில் "எந்த படமாக இருந்தாலும் விமர்சனங்கள் வரும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். கூலி விமர்சனங்களை மதிக்கிறேன். கூலி படத்துக்கு பின் வேறு வேலைகளில் பிஸியாக இருந்தேன். அது குறித்து பேசவில்லை. ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் அடுத்த படத்தில் தவறுகளை சரி செய்வேன். அதேசமயம் விமர்சனங்களை தாண்டி கூலி படம் 500 கோடிக்கு மேல் வசூலித்ததாக தயாரிப்பாளர் சொன்னார். அதற்கு காரணமாக மீடியா, மீம்ஸ், யுடியூப்பர் ஆகியோருக்கு நன்றி. ஆகவே, ரசிகர்களுக்கு நன்றி சொல்கிறேன். என் அடுத்த படங்கள் குறித்து படக் கம்பெனி அறிவிக்கும்""" என்று பேசியுள்ளார்.
இந்த ஆண்டு தமிழில் அதிக வசூல் செய்த படமாக கூலி இருப்பது குறிப்பிடத்தக்கது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!