
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி
இதற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்கி, ஹீரோவாக நடிக்க உள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இதில் கதாநாயகியாக நடிக்க தற்போது மீனாட்சி சவுத்ரி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மீனாட்சி சவுத்ரி தமிழில் ‛கொலை, சிங்கப்பூர் சலூன், தி கோட்" ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!