
யோகிபாபு பட கால்ஷீட் : கன்னட நடிகர் சுதீப் கிண்டல்
அதில் பேசிய சுதீப், "யோகிபாபு கால்ஷீட் பிஸி. அதை தவணை முறையில் வாங்க வேண்டியது உள்ளது என்று கலாய்த்தார். படப்பிடிப்பு முடிந்து கிளம்பிய நிலையிலும், யோகிபாபு தேதிகள் கிடைத்ததால் தொடர்ந்து பணியாற்றினோம். இல்லாவிட்டால் அவர் கால்ஷீட்டை வாங்க முடியாது. "" என்று சொன்னார்.
யோகிபாபு பேசுகையில் ""நான் நடிக்கும் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். சிலர் என்னிடம் சில நாட்கள் கால்ஷீட் வாங்கிவிட்டு, காமெடியனாக நடிக்க வைத்துவிட்டு நான் ஹீரோ என விளம்பரப்படுத்துகிறார்கள். நான் 22 ஆண்டுகள் போராடி இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன்"" என்று பேசினார். மேலும் இந்த பட விஷயத்தை பேசுங்கள், வேறு பட விவகாரங்களை அங்கே பார்க்கலாம்" என்று விளக்கம் அளித்தார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!