
வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது?
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் சயின்ஸ்பிக்சன் ஜானரில் உருவாகிறது. இதனால் இந்த படத்தில் கிராபிக்ஸ் பணிகள் பெருமளவில் இடம்பெறுகிறது. இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிக்காக அமெரிக்காவில் உள்ள கோலா கிராபிக்ஸ் நிறுவனம் இணைந்துள்ளனர். இதற்காக சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றுள்ளனர்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தொடங்க தற்காலிகமாக திட்டமிட்டுள்ளனர். ஒருவேளை இதில் மாற்றம் ஏற்பட்டால் பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என முனைப்புடன் பணிகள் நடைபெற்று வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!