
கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார்
கேரளாவில் காசர்கோடு பகுதியில் உள்ள பேக்கல் துறைமுகம் ரொம்பவே பிரசித்தி பெற்றது. குறிப்பாக பம்பாய் படத்தில் இடம்பெறும் உயிரே உயிரே பாடல் முழுவதும் இந்த துறைமுகத்தில் தான் படமாக்கப்பட்டது. சொல்லப்போனால் அந்த ஆண்டில் தான் இந்த பேக்கல் ரிசார்ட் வளர்ச்சிக் கழகமும் துவங்கப்பட்டு 30 வருடங்களை தற்போது நிறைவு செய்கிறது. பம்பாய் படம் வெளியான பிறகு இந்த பேக்கல் ரிசார்ட் மிகப்பெரிய அளவில் பிரசித்தி பெற்று வளர்ந்துள்ளது. தங்களது இந்த 30 ஆண்டு பயணத்தை பம்பாய் பட 30ம் ஆண்டு விழாவாக சேர்த்துக் கொண்டாடும் விதமாகத்தான் இந்த நிகழ்வுக்கு இவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!