
இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள்
தனது மகனை ஹீரோவாக வைத்து சரவண பொய்கை என்ற படத்தை இயக்கினார். அடுத்து சிலை கடத்தல் வழக்கு உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்க, சினிமாவில் இருந்து ஒதுங்கினார். இந்நிலையில், அவருக்கு சில நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி ஏற்பட, மயங்கி நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இப்போதும் அதே நிலையில் இருப்பதாக தகவல். மூளைக்கு செல்ல வேண்டிய ரத்தம் தடை பட்டு இருப்பதால் ஆபரேஷன் செய்ய முடியவில்லை என தகவல்.
இந்நிலையில், தனது தந்தை உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். அவர் உடல்நிலை சரியாக வேண்டிக்கொள்ளுங்கள் என்று அவர் மகன் கார்ல்மார்க்ஸ் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!