
கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன்
இந்நிலையில், வாலி பதிப்பகம் சார்பில் அவரின் 94 வது பிறந்தநாள் விழா, நவம்பர் 1ம் தேதி சனிக்கிழமை சென்னையில் கொண்டாடப்படுகிறது. அதில் ஆண்டுதோறும் 50 ஆயிரம் பொற்கிழியுடன் வழங்கப்படும் வாலி விருது இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரனுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளை வழங்கி வாலி குறித்து பேச உள்ளார் இயக்குனர் கே. பாக்யராஜ்.
இந்த விழாவில் திரைப்பட உதவி இயக்குனர் கவிஞர் பதுமை செல்வன் எழுதிய வாலியின் திரைப்பாட்டு முழக்கங்கள் எனும் நூலை திரைப்பட இயக்குனர் லிங்குசாமி வெளியிடுகிறார். மேலும் விழாவில் வாலி பாடல்கள் அடங்கிய திரைப்பட இசை நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!