
அந்த ஹீரோவின் கால்ஷீட் கிடைக்காததால் தான் வாத்தி படத்தில் தனுஷ் நடித்தார் : வெங்கி அட்லூரி
இதுகுறித்து அவர் கூறும்போது, “வாத்தி கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிப்பதாகத்தான் கதையை எழுதி இருந்தேன். அவரிடம் சொன்னபோது கதை பிடித்து இருக்கிறது. ஆனால் சில மாதங்கள் வரை என் கால்சீட் இல்லை. அதே சமயம் எனக்காக காத்திருங்கள் என்றும் சொல்ல மாட்டேன். வேறு வாய்ப்பு வந்தாலும் முயற்சி செய்யுங்கள் என்று கூறிவிட்டார். அதன் பிறகு தான் அந்த படத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமானார்.
இந்த விஷயத்தை ரவி தேஜாவிடம் சொன்ன போது தனுஷ் மிகப்பெரிய ஹீரோ. கவனமாக பார்த்து செய்யுங்கள் என்று கூறினார். படம் வெளியான பிறகு படத்தை பார்த்துவிட்டு நான் இதில் நடித்திருந்தால் என் கதாபாத்திரத்தை வேறு மாதிரி செய்திருப்பேன் என்று கூறினார் ரவிதேஜா” என்று வெங்கி அட்லூரி கூறியுள்ளார்..





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!