
‛காந்தாரா: சாப்டர் 1 படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி
பான் இந்தியா என்ற வார்த்தை பெரியதாக இருக்கலாம், ஆனால் நமக்குள் அடிப்படை ஒற்றுமை உள்ளது. வெளிப்படையில் நமது மரபுகள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் அதன் உள்ளார்ந்த சாரம் ஒன்றே. நாம் அனைவரும் பழங்குடி சமூகங்களாகத் தொடங்கினோம், இறுதியில், நம்பிக்கை நம்மை ஒன்றிணைக்கிறது. இந்தியாவின் அடையாளம் அதன் மண் மற்றும் அதன் விவசாய வேர்களுடன் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளது. மக்கள் காலப்போக்கில் பரிணமிக்கிறார்கள், ஆனால் அவர்களின் சாராம்சம் அவர்களின் மனிதநேயம் அவர்களின் தோற்றத்தில் வேரூன்றியுள்ளது. அதனால்தான் காந்தாரா அனைவருக்கும் ஏற்ற படமாக இணைந்தது. ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு பாரம்பரியத்திற்கும், ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமான ஒரு கதையை இது பிரதிபலிக்கிறது.
படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் புதிய சவாலாக இருந்தது. நான் இயக்கும் 5வது படமாக இருந்தாலும், முதல் படத்தை இயக்குவது போல் இருந்தது. ஒரு காலத்தில் 1.4 கோடி ரூபாயில் படம் எடுத்தது பெரிய விஷயமாயிருந்தது. ஆனால் "காந்தாரா"வுக்குப் பிறகு நான் எதிர்பார்க்காத அளவில் புகழும் விருதுகளும் வந்தன. படப்பிடிப்பின் போது சிலர் உயிரிழந்ததாக வந்த செய்திகள் உண்மையில்லை. படப்பிடிப்பு குழுவில் இருந்தவர்கள் யாரும் இறக்கவில்லை. ஆனால், படத்திற்கு சம்பந்தப்பட்ட மூவர் உயிரிழந்தனர். ஒருவர் ரிகர்சல் பார்க்கும் போது மாரடைப்பு வந்து இறந்தார், இன்னொருவர் கோயில் அருகே ஆற்றில் நீந்தி குளிக்கும் போது மூழ்கி இறந்தார், மற்றொருவர் என் நெருங்கிய நண்பரும், திறமையான கலைஞருமான ராகேஷ் என்பவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இறந்தார். இவரின் இழப்பால் எங்கள குழுவே பாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!