
உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார்
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண் கடந்த சில மாதங்களாக பணிப்பெண்ணாக இவர்கள் வீட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண், டிம்பிள் ஹயாதி மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதில் அவர் வேலைக்கு சேர்ந்ததில் இருந்தே தன்னை அவர் டார்ச்சர் செய்தாகவும், நிர்வாணப்படுத்தி வீடியோ எடுக்க முயற்சித்தாகவும், சரியான உணவு, உடைகூட தரவில்லை. டிம்பிளும், அவரது கணவரும் இணைந்து என்னை அடித்து உதைத்து எனது உடைகளை கிழித்தனர் என்றும் அந்த புகாரில் கூறியுள்ளார்.
போலீசார் டிம்பிள் ஹயாதி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் டிம்பிள் கைதாகலாம் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!