
கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி
படம் பற்றி இயக்குனர் பிரகபல் கூறியதாவது: மதுரைக்கு செல்லும்போது கிடா சண்டை பந்தையத்தை நேரில் பார்த்தேன். தமிழ் மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றி போன ஒரு விளையாட்டு என்று கண்டறிந்தேன். பிறகு அது சம்பந்தமான நிறைய தரவுகளை சேகரிக்க தொடங்கினேன். மதுரையிலேயே தங்கி கதை எழுத ஆரம்பித்தேன். இந்த படத்தில் கிடா சண்டைகளை காட்சிப்படுத்தியுள்ளேன். அதை உண்மைக்கு நெருக்கமாக, மிகவும் நேர்த்தியாக படமாக்கியுள்ளேன். திரையில் அந்த காட்சிகளில் கதாநாயகனுக்கும், கிடாவுக்கும் இருக்கும் பிணைப்பை பார்க்கும்பொழுது உங்களுக்கு தெரியவரும்"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!