
பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம்
1953ம் ஆண்டு வெளியான இந்த படம் அப்போது பரபரப்பாக பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. டி.வி.ராம்நாத், கிருஷ்ணசாமி இயக்கிய இந்த படத்தின் திரைக்கதையை டி.எஸ்.எஸ்.மணி எழுதினார். விஜயகுமார், மங்களம், கிருஷ்ணா சர்மா, மேனகாக என்ற புதுமுகங்கள் நடித்தார்கள்.
"மின்மினி"யின் நாயகன் வேடத்தில் நடித்த எம்.எஸ்.விஜயகுமார் என்பவர் ராயப்பேட்டையில் இருந்த பழைய உட்லண்ட்ஸ் ஓட்டலில் வரவேற்பாளராக இருந்தவர். 6 ஆயிரம் அடி படம் வளர்ந்த நிலையில் தயாரிப்பாளருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட படம் பாதியில் நின்றது. பின்னர் "மின்மினி" படப்பெட்டி தயாரிப்பாளரின் கடனை அடைக்க ஏலம் விடப்பட்டது. பின்னர் ஒருவழியாக படப்பெட்டியை கைப்பற்றி மீதிப் படத்தை முடித்தார்கள்.
கோர்ட் உத்தரவின்படி ""இது ஒரு கற்பனைக் கதைதான். இதில் சித்தரிக்கப்படும் சம்பவங்கள் யாரையும் குறித்தவை அல்ல,"" என்ற அறிவிப்புடன் "மின்மினி" வெளியானது. கொலை செய்யப்பட்ட லட்சுமிகாந்தன் சினிமா தூது, இந்து நேசன் இதழ்களை நடத்தினார். படத்தின் நாயகன் "மின்மினி" என்ற இதழை நடத்துவது போன்று சித்தரிக்கப்பட்டது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!