
டிரஸ் வாங்க பணமின்றி புரமோஷனுக்கு படப்பிடிப்பு உடைகளையே அணிந்த விஜய் தேவரகொண்டா
செப் 19, 2025
Advertisement
தெலுங்கு திரையுலகில் கடந்த சில வருடங்களில் குறிப்பிடத்தக்க முன்னணி இளம் நடிகராக வளர்ந்துள்ளவர் விஜய் தேவரகொண்டா. தனக்கென ரவுடி என்கிற பெயரில் துணி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வரும் அளவிற்கு முன்னேறி உள்ளார். அவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் அவருக்கு மிகவும் கை கொடுத்த படமாக அமைந்தது எவடே சுப்பிரமணியம் என்கிற படம் தான். அதை தொடர்ந்து வெளியான அர்ஜுன் ரெட்டி படம் தான் அவரை பிரபலமான ஹீரோவாக்கியது.
ஆனால் எவடே சுப்பிரமணியம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு புதிய உடைகள் வாங்க தன்னிடம் பணம் இல்லாததால் படப்பிடிப்பில் தான் பயன்படுத்திய உடைகளையே அணிந்து கொண்டு தான் அந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன் என்று சமீபத்தில் கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.
புதிய படங்களில் அறிமுகமாகும் புதுமுகங்களுக்கு இருக்கும் போராட்டத்தைத் தன்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்பதால் தான் தற்போது சமீபத்தில் வெளியான லிட்டில் ஹார்ட்ஸ் படத்தின் குழுவினருக்கு தன்னுடைய சொந்த துணி தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து உடைகளை பரிசாக கொடுத்ததாகவும் கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.
ஆனால் எவடே சுப்பிரமணியம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு புதிய உடைகள் வாங்க தன்னிடம் பணம் இல்லாததால் படப்பிடிப்பில் தான் பயன்படுத்திய உடைகளையே அணிந்து கொண்டு தான் அந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன் என்று சமீபத்தில் கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.
புதிய படங்களில் அறிமுகமாகும் புதுமுகங்களுக்கு இருக்கும் போராட்டத்தைத் தன்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்பதால் தான் தற்போது சமீபத்தில் வெளியான லிட்டில் ஹார்ட்ஸ் படத்தின் குழுவினருக்கு தன்னுடைய சொந்த துணி தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து உடைகளை பரிசாக கொடுத்ததாகவும் கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!