
கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை
உண்மையில் இது என்ன மாலை என எனக்கு தெரியாது. என் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டு ஊரில் போய் பார்த்தேன். அப்போது என் தாத்தா போட்டோவில் இந்த மாலை மாட்டியிருந்தது. அதை பார்த்தவுடன் எனக்கு அதை தர முடியுமா என்று பாட்டியிடம் கேட்டேன். இது சாதாரண மாலை அல்ல, அவர் 40 ஆண்டுகள் போட்டிருந்த மாலை, அதுவும் நிறைய பக்தியுடன் தினமும் மந்திரங்கள் சொல்லி போட்டிருந்த மாலை என்றார்.
நான் கேட்டவுடன், நேராக என் தாத்தா போட்டோ முன்னால் போய் பாட்டி பேசினார். நமக்கு எத்தனையோ பேரப்பிள்ளைங்க இருந்தாலும், இவன்தான் இந்த மாலை அருமை உணர்ந்து கேட்கிறான். அதை கொடுக்கிறேன் என்றார். அது வந்தபின் எனக்கு தனி உற்சாகம். கருங்காலி மாலை அதை செய்யும், இதை செய்யும் என்றார்கள். உண்மையில் என்னை ஒன்றும் செய்யாது. ஏனெனில் இது என் தாத்தா மாலை என கலகலவென பேசினார்.
மேலும் அவர் என்னை பற்றி பெருமையாக பேசமாட்டேன். ஆனால் நான் நல்ல தகப்பன். இந்த 42 வயதில் இன்னும் சாதிக்க ஆசைப்படுகிறேன். அதனால், என் பயோபிக் படம் பற்றி யோசிக்கவில்லை. நான் தேசிய விருது வாங்கிவி்ட்டேன். ஹாலிவுட் படத்தில் நடித்துவிட்டேன். ஆஸ்கர் விருது பற்றி கேட்கிறார்கள். அது தலையில் இருப்பது போல நடக்கும் என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!