
குல தெய்வம் கோயிலுக்கு போங்க : ரசிகர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
நான் எத்ததனையோ நாடுகளில், எத்தனையோ ஓட்டல்களில் சாப்பிட்டு இருக்கிறேன். எங்கள் ஊரில் உழைத்து காசு வாங்கி இட்லி வாங்கி சாப்பிட்ட அந்த ருசி, திருப்தி எங்கேயும் கிடைக்கவில்லை. அந்த ஊர் மக்கள், நான் பார்த்த சில கேரக்டரை வைத்து இந்த படம் எடுத்தேன். நம் முன்னோர்கள்தான் நம் மூச்சு காற்று, நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்தது குல தெய்வம். அதை மறக்க கூடாது. இதுவரை குல தெய்வம் கோயிலுக்கு போகாதவர்கள், இனி போங்க. நம் முந்தைய குடும்ப வாழ்க்கை, வேர்களை, நாம் வந்த வழிகளை நம் குழந்தைகளுக்கு எடுத்த சொல்லி குல தெய்வம் அருளை பெறுங்க. நாம் வந்த வழியை மறக்காதீங்க.
ஒரு சிலருக்கு தாத்தா, பாட்டி மட்டுமல்ல, அவர்களுக்கு முன்பு இருந்தவர்களின் பெயர்கள் தெரிந்து இருக்கும். பலருக்கு தெரிந்து இருக்காது. நம் குடும்பத்தை வந்த வழியை எங்கே இருந்தாலும் மறக்காதீங்க. இட்லி கடை படப்பிடிப்பு தேனி அருகே உள்ள சொந்த ஊரில் நடந்தது. நான் விளையாடிய தெருக்கள், எங்கள் கருப்பசாமி கோயிலில், எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். என் அம்மாவோட அம்மா, அதாவது பாட்டி கூட இதுல நடிச்சு இருக்காங்க"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!