
பிளாஷ்பேக் : வில்லுப்பாட்டு கச்சேரி நடத்தி குடும்பத்தை காப்பாற்றிய நடிகர்
நாடகத்தில் நடித்து வந்த ராஜகோபால் 1956ம் ஆண்டு வெளிவந்த குலதெய்வம் படத்தில் நான்கு நாயகர்களில் ஒருவராக நடித்தார். அன்று முதல் "குலதெய்வம்" ராஜகோபால் என்று அழைக்கப்பட்டார். கதையின் நாயகன், இரண்டாவது நாயகன், வில்லன், குணசித்தர வேடங்களில் 100 படங்களுக்கு மேல் நடித்தார்.
ஒரு கட்டத்தில் படம் தயாரிக்க விரும்பிய ராஜகோபால் அதுவரை தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் போட்டு டி. ஆர். மகாலிங்கத்தை கதாநாயகனாக நடிக்க வைத்து, "பண்ணையார் மகன்", "கனவு பலித்ததம்மா" ஆகிய படங்களை, தயாரித்தார். இதில் கடனாளி ஆகி, படங்களும் முழுவதும் முடிந்தும், திரையிட முடியாமல், பெரும் இழப்பை சந்தித்தார். பல ஆண்டுகள் நடிப்புத் துறையில் இருந்து விலகி இருந்தார்.
பின்பு, வில்லுப்பாட்டுக் கலையை, கையிலெடுத்து, மீனாட்சி கல்யாணம், ஐயப்பன் சரிதம், திருமுருகன் ஆறுபடை சரிதம், மகாகணபதி சரிதம், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாறு, கலைவாணர் வரலாறு, காத்தவராயன் கதை, முனீஸ்வரன் கதை, ஐயனார் கதை, அகோர வீரபத்திரர் கதை, கருப்பர் கதை, காலபைரவர் கதை உள்பட பல வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி, தனது குடும்பத்தைக் காப்பாற்றினார்.
பின்னர் புயல் கடந்த பூமி, படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து, வீடு மனைவி மக்கள், வாய்ச்சொல்லில் வீரனடி, பெண்மணி அவள் கண்மணி , எங்க வீட்டு வேலன், எங்க சின்ன ராசா, பவுனு பவுனுதான், ஆராரோ ஆரிரரோ தாவணிக் கனவுகள், ஆகிய படங்களில் நடித்தார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!