
ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரகுமான்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டியர் ஸ்வேதா. உங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது கண்டு நான் மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தேன். இந்த அநீதியை பார்த்ததும் என் இதயம் கோபத்தால் கொதித்தது. உங்களை கிட்டத்தட்ட 30 வருடங்களாக எனக்கு நன்கு தெரியும். இத்தனை வருடங்களில் நீங்கள் ஒரு நல்ல நண்பராக இருந்து உள்ளீர்கள். திரையில் நான் சந்தித்த அன்பான நேர்மையான மனிதர்களில் நீங்களும் ஒருவர். நாம் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட அந்த சமயத்தில் உண்மையான நட்பை என்னிடம் வெளிப்படுத்தினீர்கள். இப்போது இருக்கும் இந்த சூழல் கொஞ்சம் மோசமானதாக தான் இருக்கிறது. உங்கள் நல்ல பெயரை குறைப்பதற்கான அப்பட்டமான முயற்சி என்பது இது நன்றாகவே தெரிகிறது. இதனால் உங்கள் மன தைரியம் உடைந்து விடாதீர்கள். இப்போது அடிக்கும் புயலை விட நீங்கள் வலுவானவர். நீங்கள் மலையாள நடிகர் சங்கத்தின் மிகச்சிறந்த தலைவராக வருவீர்கள் என எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!