
30 ஆண்டுகளுக்குப் பிறகு ‛ஜெயிலர் 2 படப்பிடிப்பில் மீண்டும் ரஜினியை சந்தித்த நடிகர் தேவன்
1995ல் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‛பாட்ஷா" படம் வெளியான போது அதில் ரஜினிகாந்த், ரகுவரன், ஆனந்தராஜ் ஆகியோருக்கு அடுத்தபடியாக பேசப்பட்ட கேசவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தேவன். அந்த படம் அவருக்கு தென்னிந்திய அளவில் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இடையில் பாட்ஷா படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ரஜினியும், நானும் எவ்வாறு நெருங்கி பழகினோம் என்றும் ரஜினியின் முதல் காதல் பற்றியும் கூட தேவன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்துள்ளார் தேவன்.
இதுபற்றி அவர் கூறும்போது, “கேரளாவிற்கு சென்று கொண்டிருந்தபோது அட்டப்பாடி பகுதியில் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடைபெறுவதாக கேள்விப்பட்டு அவரை பார்த்துவிட்டு போகலாம் என எந்த முன்னறிவிப்பு இன்றி தான் அங்கே சென்றேன். படப்பிடிப்பில் இருந்த ஒரு உதவியாளரிடம் என்னுடைய பெயரை சொல்லி ரஜினியை பார்க்கலாமா என்று அனுமதி கேட்டு விட்டு வரச் சொன்னேன். ஆனால் நான் சொல்லி அனுப்பிய நபர் வருவதற்குள்ளாகவே இன்னொரு நபரை விட்டு என்னை அழைத்து வரச் செய்தார் ரஜினிகாந்த். என்னை தூரத்திலிருந்து அவர் பார்த்து விட்டார். நான் அருகில் வந்ததும் என்னை கட்டித் தழுவி எப்படி இருக்கிறீர்கள் என விசாரித்தார். பாட்ஷா படப்பிடிப்பில் அவரை முதன்முறையாக பார்த்தபோது எப்படி அன்பை வெளிபடுத்தினாரோ அதே அன்பை இப்போதும் பார்க்க முடிந்தது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் வரை அவரிடம் பேசிக் கொண்டிருந்த விட்டு விடைபெற்றேன்” என்று கூறியுள்ளார் நடிகர் தேவன்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!