
100 நாடுகள், 10 ஆயிரம் ஸ்கிரீன், 1000 கோடி சாதனை படைக்குமா ரஜினியின் கூலி
அது மட்டுமல்ல, படத்தின் வசூல் ஆயிரம் கோடியை தொட வேண்டும். ஆயிரம் கோடியை தொட்ட முதல் தமிழ் படம் என்ற சாதனையை கூலி படைக்க வேண்டும் என்று ரஜினி தரப்பும், படக்குழுவும் விரும்புகிறதாம். அதனால், 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஸ்கிரீன்களில் உலகம் முழுக்க படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறதாம்.
தமிழகத்தில் உள்ள ஆயிரம் ஸ்கிரீன்களில் 90 சதவீதம் கூலி ஆக்கிரமிக்கும் என தெரிகிறது. படத்தை ரெட் ஜெயன்ட் வெளியிட வாய்ப்பு. அதனால், ஆகஸ்ட் 14 மற்றும் அடுத்த வாரங்களில் புது தமிழ் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்கள். கூலியுடன் போட்டி போட வேண்டாம். நாம் கொஞ்சம் லேட்டாக வருவோம் என பின்வாங்குகிறார்கள்.
ரஜினியின் சினிமா வாழ்க்கையில் 50வது ஆண்டில் இந்த படம் வெளியாக இருப்பதால், இப்படிப்பட்ட சாதனைகளை குறி வைத்து பக்கா பிஸினஸ் முன்னேற்பாடுகள் நடக்கிறதாம்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!