
கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக்
இந்த படத்தை பாலிவுட் இயக்குனரான முகேஷ் குமார் சிங் என்பவர் இயக்கியிருந்தார். விஷ்ணு மஞ்சுவின் தந்தை நடிகர் மோகன் பாபு தயாரித்திருந்தார். சமீபத்தில் இந்த படத்தின் சக்சஸ் மீட்டை கொண்டாடிய விஷ்ணு மஞ்சுவிடம் இப்படி ஒரு பக்காவான தென்னிந்திய புராணக்கதை அம்சம் கொண்ட ஒரு படத்திற்கு தெலுங்கில் இயக்குனர்களே கிடைக்கவில்லையா, எதற்காக பாலிவுட்டில் இருந்து இயக்குனரை அழைத்து வந்து இயக்க வைத்தீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்து பேசிய விஷ்ணு மஞ்சு, “கண்ணப்பா கதையுடன் நான் பல தெலுங்கு இயக்குனர்களை அணுகியபோது யாருமே இதில் இணைந்து பணியாற்ற தயாராக இல்லை. அது மட்டுமல்ல என்னுடைய முந்தைய சில படங்களும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்திருந்தன. அதுவும் ஒரு காரணம். அதேசமயம் முகேஷ் குமார் சிங், மகாபாரத கதையை தொடர்களாக இயக்கி வெற்றி பெற்றவர். சினிமாவில் அவருக்கு கண்ணப்பா தான் முதல் படம் என்றாலும் கூட அவரது அனுபவத்தால் இதை ஒரு சிறப்பான திரைப்படமாக எடுத்துக் கொடுத்தார்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!