
பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்
ரஜினியை சந்தித்த அந்த இனிய அனுபவம் குறித்து நிரஞ்சன் முகுந்தன் கூறும்போது, “ரஜினி சார் நான் சென்னையை சேர்ந்தவன் என நினைத்து தற்போது மைசூர் படப்பிடிப்பில் இருக்கிறேன் என்னை வந்து சந்திக்க முடியுமா என்று தகவல் அனுப்பி இருந்தார். அதன்பிறகு தான் நான் பெங்களூரை சேர்ந்தவன் என்று சொன்னதும் அப்படியானால் உடனடியாக வாருங்கள் என்று கூறினார். அதைத்தொடர்ந்து ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று சந்தித்தேன். அவரை சந்தித்த அந்த தருணத்தை இப்போது கூட என்னால் நம்ப முடியவில்லை.
அவரை சந்திக்கும்போதே என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் அமர்ந்து, என்னுடைய பயணங்கள் குறித்து பொறுமையாக நிறைய விசாரித்து கேட்டுக் கொண்டார். கடவுளின் குழந்தை என்று என்னை அழைத்ததுடன் எதிர்காலத்தில் இன்னும் சிறக்க தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நான் நூறாவது பதக்கம் வாங்கும் போது அணிந்திருந்த தொப்பியை எனது கிப்டாக ரஜினி சாருக்கு அளித்தேன்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!