
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம்
ஜூன் 03, 2025
Advertisement
தமிழ்த் திரையுலகத்தில் பல படங்களைத் தயாரித்த ஒரு நிறுவனம் லட்சுமி மூவி மேக்கர்ஸ். இந்நிறுவனம், “கோகுலத்தில் சீதை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், அன்பே சிவம், புதுப்பேட்டை” உள்ளிட்ட சில தரமான படங்களைத் தயாரித்துள்ளது. இவை தவிர விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், பிரபு, அஜித், விஜய், சூர்யா, பார்த்திபன், பிரபுதேவா, சிலம்பரசன், ரவி மோகன், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்த படங்களையும் தயாரித்துள்ளது.
கடைசியாக 2015ல் ரவி மோகன், த்ரிஷா, அஞ்சலி நடித்த "சகலகலா வல்லவன்" படத்தைத் தயாரித்தார்கள். அந்நிறுவனத்தின் மூன்று தயாரிப்பாளர்களில் இருவர் மறைந்ததும் தொடர்ந்து அவர்கள் படங்களைத் தயாரிப்பதை கைவிட்டார்கள்.
இந்நிலையில் பத்து வருட இடைவெளிக்குப் பிறகு அவர்களில் மறைந்த தயாரிப்பாளர் முரளிதரனின் மகன்கள் டாக்டர் ஸ்ரீவத்ஸன், கோகுல் கிருஷ்ணன் அந்தக் கம்பெனி சார்பாக புதிய படம் ஒன்றைத் தயாரிக்க உள்ளார்கள். நிறுவனத்தின் 27வது படமாக உருவாக உள்ள அப்படத்தை சஜோ சுந்தர் இயக்க புகழ் நாயகனாக நடிக்கிறார். இந்த வாரம் ஜுன் 6ம் தேதி படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகிறது.
தமிழ் சினிமாவில் பல முக்கியமான படங்களைத் தயாரித்த இது போன்ற நிறுவனங்கள் கடந்த பல வருடங்களாகவே தயாரிப்பை விட்டு விலகியிருந்தார்கள். அவர்களில் இந்நிறுவனம் மீண்டும் வந்துள்ளது திரையுலகினருக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!