
சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற குபேரா இயக்குனர் சேகர் கம்முலா
சேகர் கம்முலா திரையுலகத்தில் இயக்குனராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. அதற்காக நடிகர் சிரஞ்சீவியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அது குறித்து, “எனது டீன் ஏஜ் பருவத்தில் சிரஞ்சீவி சாரை ஒரு முறை பார்த்தேன். அருகில் இருந்து பார்த்தேன். எனக்கு அவருடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்று தோன்றியது, அவ்வளவுதான்.
நான் 25 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறேன். எங்களது குழு "கொண்டாடுவோம்" என்று சொன்னதை எனக்கு நினைவூட்டியவர் சிரஞ்சீவி. பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்த ஆளுமை அவர். "உன் கனவுகளைத் துரத்து, வெற்றி நம்மைப் பின் தொடரும்," என்ற நம்பிக்கையை சிரஞ்சீவி எனக்குக் கொடுத்தார். எனவே, எனது 25 ஆண்டு பயணத்தை அவர் முன்னிலையில் கொண்டாட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. நன்றி சார். இந்தத் தருணங்களில் மட்டுமல்ல, எனது டீன் ஏஜ் பருவத்திலிருந்தே நீங்கள் என் முன் இப்படித்தான் இருக்கிறீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!