
தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் பற்றிய வதந்தி : மறுத்த தம்பி
நேற்று முன்தினம் தான் சென்னையில் இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போதும் கூட தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் கலந்து கொண்டு நீண்ட நேரம் பேசினார்.
இதனிடையே, தயாரிப்பாளர் ரத்னம் சுயநினைவு இழந்துவிட்டார் என வதந்தி பரவியது. அதற்கு ரத்னத்தின் தம்பி தயாகர ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில், “அண்ணன் ஏஎம் ரத்னம் சுயநினைவு இழந்துள்ளதாகப் பரவும் வதந்தியை நம்ப வேண்டாம். அவர் நலமுடன் தான் இருக்கிறார். இது போன்ற தகவறான தகவல்களைப் பரப்புவதை நிறுத்துங்கள்,” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகத்தில் அறிவிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட ஸ்டிரைக், பவன் கல்யாண் தரப்பிலிருந்து தெலுங்கு திரையுலகத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள அழுத்தம் ஆகியவை கடந்த சில நாட்களாக தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வதந்தியையும் யாரோ வேண்டுமென்றே பரப்பியுள்ளதாகத் தெரிகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!