
சமந்தா காதல் விவகாரம் : வதந்தி என்கிறார் மேனேஜர்
இதனிடையே, அவர்கள் இருவரும் ஒன்றாக வசிப்பதற்காக வீடு தேடிக் கொண்டிருப்பதாகவும் கூட செய்திகள் பரவின. சமந்தாவின் மேனேஜர் அந்த காதல் விவகாரம் வெறும் வதந்தி தான் என சொன்னதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ராஜ் நிடிமொரு, ஷியாமலி என்ற சினிமா உதவி இயக்குனரை ஏற்கெனவே திருமணம் செய்து கொண்டவர். அவர்கள் பிரிந்து வாழ்கிறார்களா அல்லது விவகாரத்து பெற்றுவிட்டார்களா என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் ஷியாமலி சமூக வலைத்தளத்தில், “என்னைப் பற்றி நினைக்கும், என்னைப் பார்க்கும், என்னைப் பற்றிக் கேட்கும், என்னுடன் பேசும், என்னைப் பற்றிப் பேசும், என்னைப் பற்றிப் படிக்கும், எழுதும், இன்று என்னைச் சந்திக்கும் அனைவருக்கும் நான் அன்பையும், வாழ்த்துகளையும் அனுப்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அதுவும் சேர்ந்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ஷியாமலி பதிவில் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் என்னைப் பற்றி என்ன வேணாலும் பேசுங்க, உங்களுக்கு என் வாழ்த்துகள் என அதை கடந்து போவதையே இப்படி குறிப்பிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!