
அப்பா இசையில் முதல் தெலுங்குப் பாடல் பாடிய யுவன்ஷங்கர் ராஜா
மே 12, 2025
Advertisement
தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் தனக்கென தனிப்பெரும் இசை ரசிகர்களை வைத்திருப்பவர் இளையராஜா. தற்போது தெலுங்கில் "சஷ்டிபூர்த்தி" என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். பவன் பிரபா இயக்கத்தில் ரூபேஷ், ஆகான்ஷா, ராஜேந்திர பிரசாத், அர்ச்சனா மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் மே 30ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
இப்படத்தின் மூன்றாவது பாடலான "ராத்ரன்த ரச்சே" என்ற பாடல் நேற்று யு டியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா, நித்யஸ்ரீ வெங்கட்ரமணன் பாடியுள்ளனர்.
தெலுங்கில் இதற்கு முன்பு யுவன்ஷங்கர் ராஜா பாடியிருந்தாலும், தனது அப்பா இளையராஜா இசையில் தெலுங்கில் பாடிய முதல் பாடல் இது. அப்பாவையும், மகனையும் தங்களது படத்தில் இசையால் இணைத்ததற்கு படக்குழுவினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தப் படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி ஒரு பாடலை எழுதியுள்ளார்.
இப்படத்தின் மூன்றாவது பாடலான "ராத்ரன்த ரச்சே" என்ற பாடல் நேற்று யு டியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா, நித்யஸ்ரீ வெங்கட்ரமணன் பாடியுள்ளனர்.
தெலுங்கில் இதற்கு முன்பு யுவன்ஷங்கர் ராஜா பாடியிருந்தாலும், தனது அப்பா இளையராஜா இசையில் தெலுங்கில் பாடிய முதல் பாடல் இது. அப்பாவையும், மகனையும் தங்களது படத்தில் இசையால் இணைத்ததற்கு படக்குழுவினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தப் படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி ஒரு பாடலை எழுதியுள்ளார்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!