
துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா?
உண்மையில் இது தென்மாவட்டத்தை சேர்ந்த ஒரு கபடி வீரரின் கதை. அந்த வீரரின் பெயர் கணேசன். இவர் துாத்துக்குடி மாவட்டம் மணத்தி என்ற ஊரை சேர்ந்தவர். மிகவும் கஷ்டப்பட்டு, நிறைய போராடி கபடி வீரர் ஆனார். பின்னர், தேசிய, ஆசிய அளவில் கபடி போட்டியில் பங்கு பெற்று பல வெற்றிகளை பெற்றவர். மின்வாரியத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. இந்திய அரசு மணத்தி கணேசனுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரப்படுத்தியது.
பைசன் படத்தில் சின்ன வயது மணத்தி கணேசனாக துருவ் நடிக்கிறார். சில மாதங்களாக துருவ்வுக்கு தென் மாவட்டத்தில் மணத்தி கணேசனே கபடி பயிற்சி அளித்து இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு துாத்துக்குடி மாவட்டம் வெள்ளப் பாதிப்பில் தத்தளித்தபோது, அந்த ஏரியா எம்பியான கனிமொழியிடம் மணத்தி கணேசன் உதவி கேட்டு பீல் பண்ணி வீடியோவும் அப்போது வைரலானது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!