
பிளாஷ்பேக்: 200 படங்களை ராகத்தில் மிதக்க வைத்த எஸ்.வி.வி
சோழவந்தான் வரதராஜன் வெங்கட்ராமன் என்பதன் சுருக்கம்தான் எஸ்.வி.வெங்கட்ராமன். திரையுலக வட்டாரத்தில் "எஸ்வி" என செல்லமாக அழைப்பார்கள். 1938 முதல் 1970 வரை இந்தியத் திரைப்படத் துறையில் பணியாற்றினார். 200கும் அதிகமான படங்களுக்கு இசை அமைத்தார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த "மீரா" படத்திற்கு இசை அமைத்தது இவரது புகழ் மகுடத்தின் வைரம். கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களுக்கு இசையமைத்துள்ளார். நந்தகுமார், தாசில்தார், வால்மீகி, மனோன்மணி, கண்ணகி, நந்தனார், நாக பஞ்சமி, ஸ்ரீ முருகன், மனோகரா, இரும்புத்திரை போன்றவை அவர் இசை அமைத்த முக்கியமான படங்கள்.
எஸ்.வி.வெங்கட்ராமனுக்கு மூன்று வயதாக இருந்தபோது, அவரது தந்தை இறந்தார். பின்னர் அவர் தனது மாமா வீட்டில் வளர்ந்தார். இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் இசை கற்பதற்காக சென்னை சிந்தாரிப்பேட்டைக்கு வந்தார். பின்னர் நாடக குழுவில் சேர்ந்து நாடகத்திற்கு இசை அமைத்தார், பாடல்கள் பாடினார், நடிக்கவும் செய்தார்.
அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, என்.டி.ராமராவ் என 5 முதல்வர்களுடன் பணியாற்றினார். எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி, ஜி.கே.வெங்கடேஷ் உள்ளிட்ட பல பிரபல இசையமைப்பாளர்கள் இவரது இசை குழுவில் பணியாற்றி உள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!