
தமிழ் சினிமாவில் சிக்ஸ்பேக் சண்டை
இது அப்படியே தமிழ் சினிமாவிற்கு வந்தது. சில வில்லன் நடிகர்கள் சிக்ஸ் பாடி காட்டியபோதும் ஹீரோக்கள் அதை காட்டவில்லை. திடீரென இது ஹீரோக்கள் பக்கம் திரும்பியது, தனுஷ், சூர்யா, விஷால், ஆர்யா, ஆதி, டான்சிங் ரோஸ், அருண் விஜய், பரத், விக்ரம், விஷ்ணு விஷால் ஆகியோர் சிக்ஸ் பேக் வைத்தார்கள். காமெடியானாக இருந்த சூரியும் சிக்ஸ் பேக் காட்டினார்.
சமீபத்தில் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பினார் நடிகர் சிவகுமார். அவர் தன் மகன் நடித்த "ரெட்ரோ "படத்தின் விழாவில் பேசும்போது "தமிழ் சினிமாவில் முதன் முதலாக சிக்ஸ்பேக் வைத்தது சூர்யாதான்" என்று மகன் புகழ்பாடி விட்டார். அவ்வளவுதான் பல நடிகர்களின் ரசிகர்கள் கொதித்தெழுந்து எங்கள் ஹீரோக்கள்தான் முதலில் சிக்ஸ்பேக் வைத்தார்கள் என்று சண்டையிட ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த நிலையில் இது குறித்து விஷால் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் “முதன் முதலில் "சிக்ஸ் பேக்" வைத்தவர் தனுஷ் தான். வெற்றிமாறன் இயக்கிய "பொல்லாதவன்" படத்தில் அவர் "சிக்ஸ் பேக்" உடற்கட்டில் தோன்றுவார். அதன் பிறகு "சத்யம்" படத்தில் நான் "சிக்ஸ் பேக்" வைத்தேன். அதன்பிறகு "மதகஜராஜா" படத்திலும் அந்த தோற்றத்தில் வந்தேன். ஒருவேளை அவர் (சிவகுமார்)அதை மறந்திருக்கலாம்"" என்று குறிப்பிட்டுள்ளார்.
இது இப்படியிருக்க பில்லா படத்திற்காக நயன்தாரா சிக்ஸ்பேக் வைத்ததும், சிம்பு ஒரு படத்தில் சிக்ஸ்பேக் மேக் அப் போட்டு நடித்ததும் தனி கதை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!